Mittwoch, 13. Dezember 2006

கர்த்தருக்குள் பிரியமான சகோதரர்களே!

இது ஒரு சீர்திருத்தப்பகுதி. ஆவிக்குரிய எம் தமிழ் விசுவாசிகள் திரை மறைவிலே செய்யும் சில கபடத்தனங்களை சக விசுவாசிகள் முன் அம்பலப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் யாரும் இப்படியான கபடத்தனங்களை மேற்கொள்ளாமல் தடுக்கும் அத்தோடு மட்டுமல்லாது அவர்களை மீண்டுமாய் மனம் திரும்பவைக்கும் ஒரு சீர்திருத்தப்பிரிவே இந்த ஜாமக்காரன்2 இணையம்.இந்த பகுதிக்குள்ளே உங்களை நாம் சந்திப்பதையிட்டு பேருவகையடைகிறோம்.பாவ வாழ்க்கையிலே மூழ்குண்டு கிடந்த எம்மை கர்த்தர் கைதந்து அணைத்தெடுத்து பாவமன்னிப்பு வழங்கி மீண்டும் இந்த பாவ உலகிலே பரிசுத்தவாளர்களாய் இந்த பூமியையும் சுதந்தரித்து பரலோகத்தையும் சுதந்தரிக்கும் படி ஏற்படுத்த நாமோ மீண்டுமாய் கபடத்தனங்கள் வஞ்சகம் பதவியாசை போண்ற இச்சைகளுக்குள்ளாய் இழுப்புண்டு மீண்டும் பாவத்துக்குள்ளேயே செல்கிறோம். அத்தோடு மட்டும் நின்றுவிடாது ஏனையோரையும் பாவத்தின் திசையை நோக்கி கூட்டிச்செல்கிறோம்.விசுவாசிகளே ஒரு கணம் சிந்தியுங்கள். சீர்தூக்கிப்பாருங்கள் இன்றே மனம் திரும்புங்கள் ஏனெனில் பரலோக இராட்சியம் வெகு சமீபமாய் இருக்கிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையிலே நாமும் எடுத்துக்கொள்ளப்பட தகுதியடைவோம்.பிரியமான விசுவாசிகளே !நீங்களும் உங்களுக்கு தெரிந்த இப்படியான செயல்களை எமக்கு தந்து உதவினால் மிக உதவியாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம். தயவு செய்து யாரும் அபாண்டமாய் யாரின் மேலும் பழி சுமத்த முற்படாதீர். ஏனெனில் நீங்கள் எதை விதைத்தீர்களோ அதயே அறுவடை செய்வீர்கள். அதனால் உண்மை என உறுத்திப்படுத்தப்பட்ட செய்திகளையே எமக்கு தந்துதவுங்கள். கர்த்தருக்கு முன்னால் நீங்கள் தரும் செய்திகளை நாம் உண்மை என நம்பி இவ்விடத்திலே பிரசுரிக்கும் பட்சத்தில் அந்த விசுவாசி அப்படி ஏதும் செய்யாத பட்சத்தில் கர்த்தரின் கடும் கோபாய்கினைக்கு உள்ளாவீர்கள். எனவே உண்மையான தகவல்களை மாத்திரம் எமக்கு தந்துதவுங்கள் உங்கள் தனிப்பட்ட தரவுகளை (பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம்) நாம் உரிய முறையில் இரகசியமாக பாதுகாப்போம்.

புயலின் மத்தியில் Duisburg தேவசபை.

Duisburg நகரிலே பல்கிப் பெருகியிருக்கும் ஆவிக்குரிய சபைகளிலே Glory Gospel Mission Church எனும் ஆவிக்குரிய சபை பல உள்வீட்டு புயல்களுக்கு வளைந்து நெளிந்து கொடுத்து ஈற்றில் தாக்குப்பிடிக்கமுடியாமல் இரண்டு பிரிவாய் உடைந்துள்ளதாம் என எமது காதுகளுக்கு எட்டிய செய்தியை தங்களுக்கு மிகவும் மன வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம். சில ஆண்டுகளுக்கு முன் Glory Gospel Mission Church பிரதம போதகர் கனடா தேசம் செல்வதற்காக சபையை Bochum நகரிலே சபை நடத்தும் போதகர் ஒருவருக்கு ( தனது சகலனுக்கு) ஆசிய வர்த்தக நிறுவனத்தை விற்பது போல் தத்துக் கொடுத்துவிட்டு திடீரென தப்பியோடிவிட்டாரராம். அதன் பின் Bochum சபைப்போதகர் அங்கும் இங்கும் மாறி மாறிச் சென்று ஒருவாறு இரண்டு சபைகளையும் ஓட்டிவந்தாராம். இறுதியில் அவருக்கும் ஒரு நரித்திட்டம் மனதில் உதித்ததாம் அதாவது Glory Gospel Mission Church ஐ தனது சபையின் பெயருக்கு மாற்றிவிடவேண்டும் என்பதே அது. அவரும் அதற்குரிய பூர்வாங்க வேலைகளில் ஈடுபடவே இதனை அறிந்த சபையில் இருக்கும் இரண்டு மூப்பர் தர அதிகாரிகள் உடனேயே செயலில் இறங்கினார்களாம். தகவல் உடனேயே தப்பியோடிய போதகரின் காதில் போடப்பட்டதாம் . இதனால் தப்பியோடிய போதகர் அதி வேகமாய் வந்து ஜேர்மனியில் தரையிறங்கினாராம். தனது அதிவேகமான செயற்பாட்டால் பெயர் மாற்றத்தை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாது அந்த Bochum போதகரையும் களுத்தில் பிடித்து தள்ளாத குறையாக வெளியில் தள்ளிவிட்டாராம். அதன் பின் தனது சபையில் இருந்த மூப்பர் தர அதிகாரிகளை சபையை தொடர்ந்து நடத்துமாறு பணித்துவிட்டு மீண்டும் கனடா தேசத்துக்கு விமானத்தில் சிட்டாய் பறந்துவிட்டாராம். இவர்களோ தங்களுக்குரிய வேத அறிவின் படி சபையை ஒருமாதிரி ஓட்டிக்கொண்டு சென்றார்களாம். அண்மைக்காலத்தில் அந்த இருவருக்கும் தாங்கள் சபையின் போதகர் ஆகவேண்டும் எனும் நப்பாசை மனதிலே குடிகொண்டதாம். இதன் பிரதிபலிப்பாக சபையிலேயும் சரி பின் இலவசத்தொலைபேசியினூடாகவும் சரி மிகப்பெரியதொரு பனிப்போரே நடந்ததாம். அவர் போதகர் ஆகினால் நான் சபைக்கு வரமாட்டேன் என ஒரு மூப்பர் தர அதிகாரியும். இவர் போதகர் ஆகினால் நான் சபைக்குவரமாட்டேன் என அடுத்த மூப்பர் தர அதிகாரியும் விசுவாசிகளுக்குளேயே இலவச தொலைபேசி மூலம் தங்கள் கருத்தை ஆழமாக முன்வைத்தனராம். இதனிடையே Schwerte நகரிலே இருக்கும் ஒரு குசும்புகார மாமாப் போதகர் ஒருவரின் ஆசீர்வாத்தத்துடன் கனடா தப்பிச்சென்ற போதகருக்கு ஒரு மூப்பர்தர அதிகாரி அழுத்தங்களை கொடுத்து ஒருவாறு சபையின் புதிய போதகர் இவர்தான் என அறிவிக்க வைத்து போதகருக்கான அபிஷேகமும் பெற்றுக்கொண்டாராம். இதனால் அடுத்த மூப்பர் தர அதிகாரி சடுதியாய் கொதிப்படைந்து கடும்கோபம் கொண்டு தமிழே சரியாக பேசத்தெரியாத ஒருவரை எப்படி சபையின் போதகர் ஆக்குவது என கூச்சல் இட்டாராம். பின் இவர் கொடுத்த அழுத்தத்தின் காரணத்தாலும் மாமி மருமகன் சண்டைகாரனமாகவும் ஆஸ்த்தான போதகர் குடும்பம் கனடாவில் இருந்து ஜேமனிக்கு வந்து நிரந்தரமாகவே தங்கிவிட்டார்களாம். அப்படி இங்கு வந்து தங்கியவர்களை சபை தான் போசிக்கவேண்டும் என அறிவித்தார்களாம். அதெப்படி தப்பியோடியவர் திடீரென வந்து நின்று சபை தான் போசிக்கவேண்டும் என்றால் அது முடியாத காரியம் என அபிஷேகம் பெற்ற புதிய போதகர் கொக்கரித்தாராம். இதனை அறிந்த சபையின் ஆஸ்தான போதகர், நன்றிகெட்ட நாயே நானே தமிழ் சரியாக தெரியாத உன்னை போதகர் ஆக்கிவிட இப்ப ஈட்டியை என்னை நோக்கியே ஏவுகிறாயா என ஒரு அதிர்ச்சியான தனது முடிவை சபையிலே அறிவித்தாராம். அதாவது புதிதாக பட்டம் பெற்ற போதகர் உதவிப்போதகராகவும் தேர்தலில் தோற்றுப்போய்விட்ட அடுத்தவர் தொடர்ந்தும் மூப்பராகவும் செயற்பட தானே மீண்டும் போதகராக இருக்கப்போவதாக அறிவித்தாராம். யோவ் நான் என்ன மடையனா இப்பதான் போதகர் பட்டம் பெற்று இன்னும் சூடு கூட ஆறவில்லை அதற்குள் நான் என்ன உதவிப்போதகரா ???? முடியவே முடியாது நீங்கள் போதகராக இருந்த காலம் மலையேறிவிட்டது அதனால் சாதாரண விசுவாசி போல் சபையிலே பின்னல் இருந்துவிட்டு செல்லலாம் என அறிவித்தாராம் புதிய போதகர். இதனால் கடும் கொதிப்படைந்த ஆஸ்த்தான போதகர் புதிய போதகரை களுத்தை பிடித்து வெளியே தள்ள ஏற்கனவே போட்டி போட்டு தோற்றுப்போன மூப்பரின் உதவியையும் நாடினாராம். மூப்பரும் இது தாண்டா சந்தர்ப்பம் என தனது குள்ள நரித்திட்டத்தில் இறங்கினாராம். அதன் பிரதிபலிப்பு புதிய போதகர் சில விசுவாசிகளுடன் களுத்தில் பிடித்து சபையில் இருந்து வெளியே தள்ளப்பட்டாராம். இதன் படி 03.12.2006 இல் இருந்து சபை இரண்டாக பிரிவடைந்து ஆஸ்தான போதகர் தலமையில் ஒன்று பழைய சபை கட்டடத்திலும் அடுத்தது புதிய போதகர் வேறு இடம் இல்லாமல் தனது வீட்டு வரவேற்ப்பு அறையிலும் ஆராதனையை நடத்துகிறார்களாம்.

தமிழ் விசுவாசி இணையத்தின் மேல் சில காடைத்தன விசுவாசிகளின் பாய்ச்சல்

தமிழ் விசுவாசி இணையத்தின் மேல் சில காடைத்தன விசுவாசிகளின் பாய்ச்சல்


பிரியமானவர்களே!தமிழ் விசுவாசிகள் இணையம் சில விசுவாசிகள் வேடமிட்ட காடையரின் செயல்களை அம்பலப்படுத்தவும் மனம் திரும்பவும் ஏற்படுத்தபட்ட இணையம் என்பதை தாங்கள் அறிவீர்கள். தங்களின் காடைத்தனங்கள் அம்பலமாகுகின்றது என்பதனை அறிந்த காடைத்தனமான போதகர்களும், கள்ளத தீர்க்கதரிசிகளும் தங்கள் சபைகளின் உள்ள சில விசுவாசிக்காடையர்களை ஏவி விட்டு அவர்கள் எங்கள் செய்திகளின் கீழ் உள்ள அபிப்பிராயம் பகுதிகளில் தப்பு தப்பாக எழுதுகிறார்கள். எங்கு தங்கள் வண்டவாளங்கள் தண்டவாளங்கள் ஏறுமோ எனும் அச்சத்தில் காடைப்போதகர்கள் தங்கள் விசுவாசிகள் வேடமிட்ட அடியாட்களைக்கொண்டு திசைதிருப்ப பார்க்கிறார்கள். இங்கு நகைப்புக்கு இடமானது என்னவென்றால் இந்த விசுவாசிகள் வேடமிட்ட காடையர் கும்பல் தமிழ் விசுவாசிகள் இணையத்தினர் ஆகிய எம் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறார்களாம். இது பற்றி எல்லாம் தெரியாமலா நாம் இப்படியான ஒரு இணையத்தை தொடங்கியிருப்போம்.இவர்கள் ஏதும் தப்பு செய்யாத மாதிரியும் நாங்கள் இவர்கள் மேல் அபாண்டமாய் பழிபோடுவது போலவும் மாதிரியல்லவா இருக்கிறது இவர்களின் போக்கு. இவர்கள் திரைமறவில் செய்வதையே நாங்கள் உங்கள் முன் அம்பலமாக்குகிறோம்.காதல் முதல் காம இச்சைகள் வரை இப்பொழுதோ சபைகளில் மாமிசம் தலை விரித்தாடுகிறது. இது எமது மதிகெட்ட தமிழ்ச்சகோதரிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எம்மால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது.இந்த தமிழ் விசுவாசிகள் இணையத்தை நிறுத்தவும் இணைய ஆசிரியரின் வாழ்வு நாசமாக போகவும் தேவனிடம் உபவாசமிருந்து இந்த காடைப்போதகர் கும்பல் ஜெபிக்கிறார்களாம். மட்டுமின்றி தேவனை நம்பாது சட்ட நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றார்கள் என இரகசிய தகவல் ஒன்று எமக்கு கிடைத்துள்ளது இவர்கள் தானா விசுவாசிகள்???? தேவனை நம்பாது தானே சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்கள்.இவர்கள் பாவிகள், பரிதாபிகள். இந்த இணையத்தில் தேவனின் நாமம் தூசிக்கப்படத்தக்கதாக நாம் எதனையும் எழுதவில்லையே. இந்த ஆதிவாசிகள் போன்ற மூடத்தனமான காடையர் கும்பல்களின் தனிப்பட்ட மாமிச அடாவடித்தனங்கள தானே எழுதுகின்றோம். மன நீதியாய் தேவனின் சத்தத்துக்கு கீழ்ப்படிந்து உண்மையும் உத்தமுமாய் நடந்தால் ஏன் அவர்களின் செயல்கள் இந்த பகுதிக்குள் வரப்போகின்றன?அன்பான சகோதரர்களே Comments எனும் பகுதிகளுக்குள் சென்று பாருங்கள் எப்படி தங்கள் கருத்துக்களை இந்த விசுவாசிகள், போதகர்கள் வேடமிட்ட காட்டுமிராண்டிகள் எழுதுகிறார்கள் என்று.எந்தொரு மிரட்டலுக்கு அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுக்க நாம் தயாராக உளோம். சட்ட நடவடிகைகள் பற்றி எமது தரப்பு சட்டத்தரணியிடம் நாம் கலந்தாலோசித்துவிட்டே இந்த பகுதியை நாம் தொடங்கினோம். எந்த ஒரு தனிப்பட்ட நபரின் பெயரையும் நாம் துஷ்பியயோகம் செய்தாலே அன்றி அது தவிந்த எந்த ஒரு நடவடிக்கையும் குற்றமாக கருத்தபடமாட்டாது. நாம் இங்கு குறிப்பிடபோகும் விடையங்கள் அனைத்துக்கும் உரிய ஆதாங்களுடன் தான் எமது நகர்வுகளை மேற்கொளுகிறோம். தேவனை நோக்கி உபவாசிக்கும் உங்களிடம் ஒரு கேள்வியை விட்டுச்செல்லுகிறோம். ஏன் இது தேவனாலேயே உங்களை மனம் திரும்ப வைக்க ஏற்படுத்தப்பட்ட இணையம் என்பதை நீங்கள் ஜோசித்து பார்க்ககூடாது. நீங்கள் செய்யும் ஊழல்கள் அடாவடித்தனைங்களை கைவிட்டு மனம் திரும்பினால் ஏன் உங்கள் செயல்கள் இங்கு வரப்போகின்றன. அதைவிடுத்து இது அந்திகிறிஸ்துவின் இணையம் , சத்தானின் இணையம் என கூச்சல் போடாது மனம் திரும்புங்கள் ஏனெனில் உங்களுடன் இருந்து தான் நாமும் இதனை மேற்கொள்ளுகிறோம். இதற்கு பலதரப்பட்ட போதகர்களின் விசுவாசிகளின் அன்பும் ஆதரவும் ஆச்சீர்வாதமும் கர்த்தரின் கிருபையும் இருப்பதனால் நாம் இன்னும் இன்னும் ஊக்குவிக்கபடுகிறோம்.இப்படி கடைசிநாளில் ஒரு இணையத்தை தொடக்கி மனம் திரும்புதலை ஏற்படுத்தவேண்டு என்ற எண்ணத்தை எனது மனதில் கர்த்தரே ஏற்படுத்தின்னர் தவிர இங்கு சாத்தானுக்கு எதுவித அதிகாரமும் கிடையாது.இங்கு கர்த்தர் ஒருவரே மகிமைப்படுத்தபடத்தக்கவர்.உங்கள் உங்கள் சபைகளிலே விசுவாசிகள் மத்தியில் கர்த்தர் முன் பகிரங்கமாக உங்கள் பாவங்களை அறிக்கை செய்யது மனம் திரும்புங்கள் உங்கள் கடந்த காலச் செயலுகள் இந்த பகுதியில் இருந்து நீக்கப்படும்.

ஜேர்மனி Dortmund நகரிலே பரிதாபம்

ஜேர்மனி Dortmund நகரிலே கீரைக்கடைகளும்எதிர்க்கடைகளும் போல் தமிழ் ஆவிக்குரிய சபைகள் தடுமாறும் இதர விசுவாசிகள்.


பதவி ஆசையிலே மூழ்கிக்கொண்டு கிடந்தவர்கள் தாங்கள் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கவில்லை என்பதும் போதகர் செபஸ்தியனின் திருமணத்தை சாட்டாக வைத்துக்கொண்டு டோட்மூண்ட் நகருக்கு நகர்ந்து சென்று தாங்களாகவே ஒரு புதிய சபையை ஏற்படுத்திக்கொண்டது தான் வரலாறு. நான்கு வசனமும் கண்ணை மூடி தியானமும் கசட தபற என இரண்டு அன்னிய பாசையும் பேசினால் அவர்கள் உடனேயே போதகர்கள் மூப்பர்கள். வேதத்தில் இயேசு எங்காவது அன்னிய பாசை பேசினார் என்று இருக்கிறதா? பின்னர் நீங்கள் ஏன் பேசுகிறீர்கள். தமிழே சரியாக பேச முடியாதவர்கள் அன்னிய பாசை பேசுகிறார்களாம். கேட்கிறவன் கேணையன் என்றால் எருதுவும் ஏறோ பிளேன் ஓட்டுமாம் என்ற கதை போல் அல்லவா இருக்கிறது இவர்களின் பேச்சு. செபஸ்டியன் திருமணம் செய்தால் அதனை கேட்கும் உரிமை இயேசு கிறிஸ்து ஒருவரைத் தவிர இந்த உலகிலே யாருக்கும் கிடையாது. நீ இயேசுவை பார்க்க வந்தாயா´அல்லது செபஸ்தியனை பார்க்க வந்தாயா? டோட்மூண்டில் எத்தனை தமிழ் மக்கள் உள்ளனர் இதனிடையே எத்தனை சபைகள் அங்கு உள்ளன? இலங்கையில் மூலைக்கு மூலை இந்துக்கள் கல்லை வைத்து உண்டியல் காசு எடுக்கிறமாதியா தேவாலயம்? என்ன மானம் கெட்ட புளைப்பு இது.

ஜேர்மனி Schwerte நகரிலே ஒரு சுவாரஸ்யம்

மோசடியும், ஊழல்களும்

அது ஒரு குசும்புக்கார மாமா பற்றியது. நானே ராஜா நானே மந்திரி என்ற போக்கில் தான் அவரது ராஜாங்கம் ஜேர்மனி முழுக்க ஆவிக்குரிய வட்டத்தை நானே ஆழ வேண்டும் எனும் ஆசையில் அலையும் ஒரு குசும்புக்கார மாமா. நானே வேதாகம கல்லூரியில் கல்வி கற்ற ஜேர்மனியில் இருக்கும் ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட போதகர் பட்டமுடையவன் எனும் மமதையில் ஏனய சிறிய போதகர்களை காலுக்குள் மிதிக்க நினைக்கும் குசும்புக்கார மாமா.... அங்கு கடித்து இங்கு கடித்து கடைசியில் போதகர் உதயகுமாரின் ஹோலி ஹொட் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் ஆக்கிரமிக்க எடுத்த சதி முயற்சி போதகர் உதயகுமார் எப்பொழுதும் விழித்து இருந்ததால் முறியடிக்கப்பட்டது. இதனிடையே சபைக்கு அவர் ஓர் கட்டடத்தை வாடகைக்கு எடுத்து அதற்கு வாடகை உடன்படிக்கைப்பத்திரம் இல்லை எனவும் அதற்கு இரட்டிப்பான வாடகைப் பணம் என கூறிவந்த அவரது செயல் சகவிசுவாசிகளின் விழித்தெழுதலால் அம்பலத்துக்கு வந்தது. வாடகை உடன்படிகை பத்திரத்தை சக விசுவாசிகள் கேட்டபோது அதனை ஏன் நான் உங்களுக்கு காட்டவேண்டும் என கஜாலில் இறங்கினாராம் குசும்புக்கார மாமா. அதனால் புரட்சியில் இறங்கிய சகவிசுவாசிகள் பிரிந்து சென்று சுய நிர்ணய உரிமையில் ஒரு தனிச் சபையை உருவாக்கிவிட்டர்களாம். பலே.... எப்படி ஒரு பக்திமான்.